×

மதுரையில் வாக்கு எண்ணும் மையத்தில் மர்ம நபர்கள் நுழைந்ததால் பரபரப்பு!

மதுரை மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதியின்றி வெளியாட்கள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறை வரை சென்ற 2 மர்மநபர்களை அரசியல் கட்சியினர் சுற்றி வளைத்து பிடித்தனர். 2பேரும் உரிய அடையாள அட்டையின்றி ஸ்ட்ராங் ரூம் வரை சென்றதற்கு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வாக்காளர் மையத்துக்கு திமுக வேட்பாளர் பூமிநாதன் வருகை தந்துள்ளார். அவருடன் திமுக வேட்பாளர்கள் பலர் வாக்கு எண்ணும் மையம் முன் குவிந்துள்ளதால் பரபரப்பு
 

மதுரை மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதியின்றி வெளியாட்கள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறை வரை சென்ற 2 மர்மநபர்களை அரசியல் கட்சியினர் சுற்றி வளைத்து பிடித்தனர். 2பேரும் உரிய அடையாள அட்டையின்றி ஸ்ட்ராங் ரூம் வரை சென்றதற்கு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வாக்காளர் மையத்துக்கு திமுக வேட்பாளர் பூமிநாதன் வருகை தந்துள்ளார். அவருடன் திமுக வேட்பாளர்கள் பலர் வாக்கு எண்ணும் மையம் முன் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாக்கு மையத்தில் 2 பேரின் ஊடுருவல் குறித்து ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் இதுவரை யாரும் வரவில்லை என திமுக புகார் அளித்துள்ளது. 2 பேரும் உரிய அடையாள அட்டையின்றி ஸ்ட்ராங் ரூம் வரை சென்றதற்கு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.