×

அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி நீதிமன்றம் ஓடிய ஈபிஎஸ், ஓபிஎஸ்

தங்களுக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி கட்சியில் இருந்து தன்னை நீக்கியது தொடர்பான அறிக்கை மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது பெங்களூரு புகழேந்தி அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நாளை நேரில் ஆஜராக
 

தங்களுக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி கட்சியில் இருந்து தன்னை நீக்கியது தொடர்பான அறிக்கை மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது பெங்களூரு புகழேந்தி அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நாளை நேரில் ஆஜராக எம்.பி. – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர் செல்வத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் அந்தவழக்கை ரத்து செய்ய பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. எம்.பி. – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகள் வெள்ளிக்கிழமை தான் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என நீதிபதி நிர்மல்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.