×

மின்கட்டணம் செலுத்த அடுத்த மாதம் ஜூலை 5 ஆம் தேதியே கடைசி நாள்- மின்சார வாரியம்

கொரோனா நோய் தொற்றால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர். இதனால் அரசு முடிந்தளவு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் மின் கட்டணம் செலுத்த அரசு காலக்கெடு நிர்ணயித்து இருந்தது. இருப்பினும் தற்போது நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வரும் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கபட்டுள்ளது. இதனால் தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டணம் செலுத்துவதற்கு காலக்கெடு நீட்டிப்பு செய்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” கோவிட்-19 பரவுதலால்
 

கொரோனா நோய் தொற்றால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர். இதனால் அரசு முடிந்தளவு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் மின் கட்டணம் செலுத்த அரசு காலக்கெடு நிர்ணயித்து இருந்தது. இருப்பினும் தற்போது நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வரும் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கபட்டுள்ளது. இதனால் தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டணம் செலுத்துவதற்கு காலக்கெடு நீட்டிப்பு செய்துள்ளது.

இதுகுறித்து  தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” கோவிட்‌-19 பரவுதலால்‌ 24.03.2020 நள்ளிரவு முதல்‌ ஊரடங்கு அமல்படுத்தியதன்‌ காரணமாக, தாழ்வழுத்த மின்நுகர்வோர்களின்‌ இடர்பாடுகளை கருத்தில்‌ கொண்டு, தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மான கழக தாழ்வழுத்த மின்‌ பயனீட்டாளர்களின்‌ மின்னிணைப்புகளுக்கு மின்‌ கட்டணம்‌ மற்றும்‌ இதர நிலுவை தொகை செலுத்துவதற்கான கெடு நாள்‌ 05.07.2020 ரை கட்டணம்‌ செலுத்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த ஜூலை 6 வரை அவகாசம் வழங்கபட்டிருப்பதாகவும், மற்ற மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15 வரை அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாதம் ஆறாம் தேதியே மின்கட்டணம் செலுத்த கடைசி தேதி என்று இருந்த நிலையில் மேலும் ஒரு மாதம் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.