×

தேர்தல் பாதுகாப்பு பணி- 250 கம்பெனி துணை ராணுவ படையினர் வருகை

 

தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதலாக 250 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழகம் வந்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சான பட்நாயக் தெரிவித்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக ஏற்கனவே 50 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழகம் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் கூடுதலாக 250 கம்பெனி துணை ராணுவ படையினர் இன்று ( மார்ச் 19 ) தமிழகம் வருகை புரிந்துள்ளனர். இதன்படி மொத்தம் 300 கம்பெனி துணை ராணுவ படையைச் சேர்ந்த 20 ஆயிரம் வீரர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

ஒரு சட்டமன்ற தொகுதிகக்கு ஒரு கம்பெனி என்ற அடிப்படையிலும், தேவையின் அடிப்படையில் ஒரு சட்டமன்ற தொகுதியில் கூடுதல் கம்பெனி துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபடுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.