×

#BREAKING தேர்தல் தேதி அறிவிப்பு- உடனடியாக அமலுக்கு வந்த நடத்தை விதிகள்

 

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் தேதியைசற்றுமுன் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் வெளியிட்டார். அதன்படி வரும் 30ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் வரும் ஏப்.6, வேட்புமனு பரிசீலனை ஏப்.7ம் தேதி, வேட்பு மனுவை திரும்பப் பெறுவது ஏப்.9ம் தேதி, வாக்குப்பதிவு ஏப்.23ம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

அதன்படி,

  • தேர்தல் விதிகள் அதிரடியாக அமலானதால்  அரசு அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும்.
  • நடத்தை விதி அமலுக்கு வந்த பின்பு அரசு எந்த புதிய அறிவிப்பும் வெளியிட முடியாது.
  • அரசு சார்பில் ஏற்கனவே இருக்கும் பணிகள் தொடர்ந்து நடக்கலாம், புதிய பணிகளை தொடங்க முடியாது.
  • தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க அரசு அதிகாரிகள் கொண்ட பறக்கும் படைகள் களத்தில் இறங்கும்.
  • கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் அனுமதி பெறுவது அவசியம்.
  • அனுமதி பெறாமல் அரசியல் கட்சிகளின் கொடிகள், பேனர்களை வைக்கக்கூடாது - இந்திய தேர்தல் ஆணையம்.
  • பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் அழிக்கப்படும்.
  • அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம், பரிசு தரக்கூடாது.
  • மாநிலம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்களின் சிலைகள் மறைப்பு கொண்டு மூடப்படும்.
  • சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனங்கள் தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்படும்.
  • உரிய ஆவணங்களின்றி அதிகளவிலான பணம், நகை உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல முடியாது