×

‘வீடு புகுந்து பணம், நகை கொள்ளை’ தொடர் திருட்டில் சிக்கிய 71 வயது முதியவர் !

திருப்பத்தூர் பல்வேறு பகுதியில் தொடர் திருட்டில் ஈடுட்டு வந்த முதியவரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூரின் பல இடங்களில் தொடர் திருட்டு நடைபெற்று வருவதாக போலீசாரிடம் புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தது. இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ரமேஷ் என்னும் கர்நாடக மாநிலம் சிக்மங்களூரைச் சேர்ந்த 71 வயதான நபர் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது அம்பலமானது. இதனையடுத்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து முதியவர் தங்கி இருந்த இடத்தை கண்டுபிடித்த போலீசார், அவரை
 

திருப்பத்தூர் பல்வேறு பகுதியில் தொடர் திருட்டில் ஈடுட்டு வந்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூரின் பல இடங்களில் தொடர் திருட்டு நடைபெற்று வருவதாக போலீசாரிடம் புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தது. இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ரமேஷ் என்னும் கர்நாடக மாநிலம் சிக்மங்களூரைச் சேர்ந்த 71 வயதான நபர் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது அம்பலமானது. இதனையடுத்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து முதியவர் தங்கி இருந்த இடத்தை கண்டுபிடித்த போலீசார், அவரை அதிரடியாக கைது செய்தனர்.

மேலும், அவரிடம் இருந்து 8.10 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளையும் ரூ.40 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், வீட்டு உரிமையாளர்கள் வெளியே செல்லும் நேரமாக பார்த்து வீடு புகுந்து நான் நிதானமாக கொள்ளையடிப்பேன் என்றும் முடியாத பட்சத்தில் சில மணி நேரம் அங்கேயே ஓய்வெடுத்த பிறகு வெளியேறுவேன் என்றும் அசால்டாக கூறியிருக்கிறார் அந்த முதியவர். இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய போலீசார், அவரிடம் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.