×

பக்ரீத் பண்டிகை: முதல்வர் விஜய் வாழ்த்து..!

 

உலகம் முழுவதும் இஸ்லாமிய மக்களால் பக்ரீத் பண்டிகை நாளை (மே 28) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, இஸ்லாமிய சமூக மக்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்துப்பதிவில், “ஈகைத் திருநாளாம் பக்ரீத் திருநாளை முன்னிட்டு, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறைவனின் கட்டளைக்கிணங்க தனது ஒரே மகன் இஸ்மாயிலை தியாகம் செய்யத் துணிந்த இப்ராஹிம் நபியின் உன்னதமான இறைபக்தியையும், தியாகத்தையும் நினைவுகூரும் வகையில் பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இறை நம்பிக்கை, தியாகம், கருணை, பகிர்வு, மனிதநேயம் ஆகிய உயரிய விழுமியங்களை மனிதகுலத்திற்கு உணர்த்தும் புனிதப் பெருநாளாக பக்ரீத் திகழ்கிறது.

ஏழை, எளிய மக்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதையும், சமூகத்தில் அன்பும், சமத்துவமும் நிலைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பக்ரீத் திருநாளில் சமுதாயத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்கிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டு, அனைவருக்கும் எனது பக்ரீத் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறப்பட்டுள்ளது.