×

“இவர்களால் மட்டும் தான் தமிழகம் காப்பாற்றப்படுகிறது : எடப்பாடி பழனிசாமி ட்வீட்!

முன்களப் பணியாளர்களின் தியாகங்களினால் மட்டுமே நம் தமிழகம் காப்பாற்றப்படுகிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் பருத்தி குளம் பகுதியை சேர்ந்த பவானி என்பவர் ஒன்பதாவது மண்டலத்தில் பெருநகர துணை மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 22ஆம் தேதி தொற்றால் பாதிக்கப்பட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 26ஆம் தேதி குணமாகி வீட்டுக்கு திரும்பியுள்ளார். வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட பவானி திடீரென மூச்சுத்திணறல் காரணமாக 28ஆம் தேதி மீண்டும் காஞ்சிபுரம் அரசு
 

முன்களப் பணியாளர்களின் தியாகங்களினால் மட்டுமே நம் தமிழகம் காப்பாற்றப்படுகிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் பருத்தி குளம் பகுதியை சேர்ந்த பவானி என்பவர் ஒன்பதாவது மண்டலத்தில் பெருநகர துணை மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 22ஆம் தேதி தொற்றால் பாதிக்கப்பட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 26ஆம் தேதி குணமாகி வீட்டுக்கு திரும்பியுள்ளார். வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட பவானி திடீரென மூச்சுத்திணறல் காரணமாக 28ஆம் தேதி மீண்டும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “சென்னை மாநகராட்சியில் துணை பெருநகர மருத்துவமனையில் நகர சுகாதார செவிலியராக பணியாற்றிவந்த அன்புச்சகோதரி பவானி என்பவர் 22-04-2021 அன்று கொரோனா தொற்று ஏற்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,5 நாட்கள் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பி யுள்ளார்.

28-04-2021 அன்று, அதே மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட போதும், பலர் படுக்கை கிடைக்காமல் வெளியே உயிருக்குப் போராடுகின்றனர் என்பதை அறிந்து, தனக்கு கிடைத்த ஆக்சிஜன் படுக்கையை விட்டுக் கொடுத்து,12-05-2021 முதல் வீட்டிலேயே தனிமைப்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில்,மூச்சுத்திணறல் ஏற்பட்டு கடந்த 19ஆம் தேதி உயிரிழந்தார் என்பதையறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

இவர்களைப் போன்ற முன்களப் பணியாளர்களின் தியாகங்களினால் மட்டுமே நம் தமிழகம் காப்பாற்றப்படுகிறது. அவரின் தியாகத்தை வணங்கி, என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.