×

இறைவனுக்கு சமமாக பார்க்க கூடியவர்கள் மருத்துவர்கள் – முதல்வர் பழனிசாமி

மருத்துவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கும் வாய்ப்பை இறைவன் கொடுத்தது எனக்கு கிடைத்த பாக்கியம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, “மருத்துவர்கள் இறைவனுக்கு சமமானவர்கள். அர்ப்பணிப்புடன் பணியாற்றிவரும் மருத்துவர்களுக்கும் காவலர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கும் வாய்ப்பை இறைவன் கொடுத்தது எனக்கு கிடைத்த பாக்கியம். அமைச்சர் காமராஜ் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி
 

மருத்துவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கும் வாய்ப்பை இறைவன் கொடுத்தது எனக்கு கிடைத்த பாக்கியம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, “மருத்துவர்கள் இறைவனுக்கு சமமானவர்கள். அர்ப்பணிப்புடன் பணியாற்றிவரும் மருத்துவர்களுக்கும் காவலர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மருத்துவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கும் வாய்ப்பை இறைவன் கொடுத்தது எனக்கு கிடைத்த பாக்கியம். அமைச்சர் காமராஜ் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளார் என்பதை கேட்டு மகிழ்ச்சியடைகிறேன். அவர் குணமடைந்ததற்கு முழு காரணம் மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சை தான். இதற்காக மருத்துவர்களுக்கு பாராட்டு தெரிவித்துகொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.