கொரோனாவை கட்டுப்படுத்த இத பண்ணுங்க! தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி அட்வைஸ்
கொரோனா தொற்று அதிகரித்ததற்கு அதிமுகவே காரணம் என திமுக குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அதற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “பரிசோதனை மையங்களை தமிழக அரசு அதிகரிக்க வேண்டும். தமிழக அரசு தேவையான ஆக்சிஜனை மத்திய அரசிடம் கேட்டுப்பெற வேண்டும். இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பது வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. தமிழக அரசு தேவையான ஆக்சிஜனை மத்திய அரசிடம் கேட்டுப்பெற வேண்டும்.
அதிமுக அரசு சிறப்பாக கொரோனா பரவலை சிறப்பாக கையாண்டது. அதேபோல் திமுக அரசு போர் கால அடிப்படையில் செயல்பட வேண்டும். அப்போதுதான் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும்” எனக் கூறினார்.