நாளை முதல் குடிநீர் வரி கட்டணங்கள் ரொக்கமாக பெறப்பட மாட்டாது - சென்னை குடிநீர் வாரியம்
Sep 30, 2023, 11:43 IST
நாளை முதல் குடிநீர் வரி கட்டணங்கள் ரொக்கமாக பெறப்பட மாட்டாது என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், அனைத்து பகுதி அலுவலகங்களில் செயல்பட்டுவரும் வசூல் மையங்கள்
வழக்கம் போல் இயங்கும், பணிமனை அலுவலகங்களில் தற்போது செயல்பட்டுவரும் வசூல் மையங்கள் 01.10.2023 முதல் செயல்படாது. குடிநீர் / கழிவுநீரகற்று வரி மற்றும் கட்டணங்களை செலுத்தும் நுகர்வோர்களின் வசதிக்காக அனைத்து பகுதி அலுவலகங்கள் மற்றும் பணிமனை அலுவலகங்களில் காசோலை / வரைவோலை பெறுவதற்கான பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.