×

‘ரூட்டு தல’ மோதல் வேண்டாம் : மாணவர்களுக்கு போலீசார் அறிவுரை!!

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு சென்னை மாநகர போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர். தமிழகத்தில் கடந்த 1 ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் சென்னை பச்சையப்பன் கல்லூரி படிக்கும் மாணவர்கள் மத்தியில் எந்த ரூட் சிறந்தது என்ற போட்டி எழுந்தது. இதனால் கல்லூரி மாணவர்கள் மூன்று குழுவாகப் பிரிந்து பச்சையப்பன் சிலைக்கு ஊர்வலமாக மாலை அணிவித்தனர் இந்த ஊர்வலத்தில் சுமார் 200 பேர் கலந்துகொண்ட நிலையில் கல்லூரி மாணவர்கள் 200 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ்
 

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு சென்னை மாநகர போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 1 ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் சென்னை பச்சையப்பன் கல்லூரி படிக்கும் மாணவர்கள் மத்தியில் எந்த ரூட் சிறந்தது என்ற போட்டி எழுந்தது. இதனால் கல்லூரி மாணவர்கள் மூன்று குழுவாகப் பிரிந்து பச்சையப்பன் சிலைக்கு ஊர்வலமாக மாலை அணிவித்தனர் இந்த ஊர்வலத்தில் சுமார் 200 பேர் கலந்துகொண்ட நிலையில் கல்லூரி மாணவர்கள் 200 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் கல்லூரி திறந்த முதல் நாளே ஊர்வலம் சென்றதாக ஊர்வலத்தில் கலந்துகொண்ட முன்னாள் மாணவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னை கல்லூரி மாணவர்கள் மோதலை தடுக்க காவல்துறை அதிகாரிகள் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். ரூட்டு தல எனக்கூறி கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுக்க போலீசார் நேரில் சென்று அறிவுரை வழங்கி வருகின்றனர். சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவையடுத்து கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரியில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பஸ்டே, மோதல் போன்ற செயலில் ஈடுபட்டு வழக்கில் சிக்கினால் எதிர்காலத்தில் பிரச்சினைகள் வரும் எனவும் போலீசார் கூறியுள்ளனர்.