மக்களே இது தெரியுமா..? ஜூன் 1 முதல் பான் கார்டில் வந்துள்ள 5 முக்கிய மாற்றங்கள்..!
வருமான வரித் துறை வருமான வரி விதிகள் 2026-இன் கீழ் முழு பான் கார்டு அமைப்பையும் மேம்படுத்தியுள்ளது.
முன்பு உங்கள் ஆதார் எண்ணை மட்டும் பயன்படுத்தி சில நிமிடங்களில் உடனடி இ-பான் கார்டைப் பெற முடிந்தது. ஆனால், புதிய விதிகளின்படி, பிறந்த தேதிக்கான (DOB) ஆதாரமாக ஆதார் கார்டு மட்டும் இனி ஏற்றுக்கொள்ளப்படாது.புதிய பான் கார்டு அல்லது திருத்தத்திற்கு உங்கள் ஆதார் கார்டுடன் பிறப்புச் சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற தனி ஆவணங்களையும் நீங்கள் இப்போது வழங்க வேண்டும்.
அதேபோல, ங்கள் ஒரு புதிய பான் கார்டுக்கு விண்ணப்பித்தால் பழைய விண்ணப்பப் படிவங்கள் (படிவம் 49A மற்றும் படிவம் 49AA) முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டன என்பதை நினைவில் கொள்ளவும்.
இந்த புதிய விதிகள் சிறு மற்றும் நடுத்தர வரி செலுத்துவோருக்கு சில குறிப்பிடத்தக்க சலுகைகளையும் வழங்குகின்றன. அசையாச் சொத்துக்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் கட்டாய பான் கார்டு தேவைப்படுவதற்கான வரம்பு ரூ. லட்சத்தில் இருந்து ரூ. 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இனி ரூ. 5 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள வாகனங்களுக்கு (தற்போது இருசக்கர வாகனங்களும் இதில் அடங்கும்) மட்டுமே பான் தேவைப்படும். டிராக்டர்கள் இந்த வரம்பிலிருந்து விலக்கப்பட்டுள்ளன.
ஹோட்டல்கள், விருந்து அரங்குகள் அல்லது நிகழ்வு மேலாளர்களுக்கு ரொக்கமாகச் செலுத்துவதற்கான வரம்பு 50,000 ரூபாயில் இருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பான் கார்டு இல்லாதவர்கள் நிதிப் பரிவர்த்தனைகளுக்கு படிவம் 60-ஐ பூர்த்தி செய்து வந்தனர். தற்போது, அதற்குப் பதிலாக புதிய படிவம் 97 நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ரூ. 45 லட்சத்திற்கும் அதிகமான எந்தவொரு பெரிய சொத்து பரிவர்த்தனைக்கும் பான் கார்டு வைத்திருப்பது இப்போது முற்றிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அத்தகைய பரிவர்த்தனைகளுக்கு படிவம் 97 கூட பயன்படாது. வங்கிகளில் தினசரி 50,000 ரூபாய்க்கு மேல் வைப்புத்தொகை செய்வதற்கு பான் கார்டு தேவை என்ற விதி மாற்றப்பட்டுள்ள நிலையில், ஆண்டுக்கு ரூ. 10 லட்சத்திற்கும் அதிகமான ஒட்டுமொத்த ரொக்க வைப்புகள் அல்லது எடுப்புகள் இனி உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும்.
படிவம் 93 இப்போது இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமே பிரத்தியேகமாகப் பொருந்தும். மேலும், மற்றும் படிவம் 94 இந்திய நிறுவனங்களுக்குப் பொருந்தும். வெளிநாட்டுக் குடிமக்களுக்குப் படிவம் 95 மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் படிவம் 96 கட்டாயமாகும். பழைய படிவங்களைப் பயன்படுத்திச் செய்யப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
வருமான வரித் துறை இப்போது பான் தரவு சரிபார்ப்பை முழுமையாகத் தானியக்கமாக்கியுள்ளது (டிஜிட்டல் முறை). இதற்கு முன்பு, பெயர் எழுத்துப்பிழைகளில் சிறிய வேறுபாடுகள் இருந்தாலும் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால் இனி அவ்வாறு இருக்காது. உங்கள் பான் விண்ணப்பத்தில் உள்ள பெயர், பாலினம் மற்றும் பிறந்த தேதி ஆகியவை உங்கள் ஆதார் தரவுத்தளத்துடன் எழுத்துக்கு எழுத்து சரியாகப் பொருந்த வேண்டும். ஒரே ஒரு இடைவெளி அல்லது எழுத்துப் பிழை ஏற்பட்டால் கூட படிவம் உடனடியாக நிராகரிக்கப்படும்.