×

சுவர் அபகரிப்புலாம் முடிஞ்சுது இனி நில அபகரிப்பு… திமுக ஒன்றிய செயலாளர் கைது!

வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சொந்தமான நிலத்தை அபகரித்த புகாரில் தேடப்பட்டு வந்த நாகை கீழையூர் திமுக நிர்வாகி தாமஸ் ஆல்வா எடிசனை சென்னையிலுள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் வைத்து போலீசார் கைது செய்தனர். வேளாங்கண்ணியில் உள்ள இரஜதகிரீஸ்வரர் கோவில், அரசு புறம்போக்கு நிலங்களை முறைகேடாக பட்டா மாறுதல் செய்து கையகப்படுத்திக் கொண்டதாக புகார் எழுந்தது. இவர் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சொந்தமான நிலத்தையும் அபகரித்ததாக அதிமுக நகர செயலாளர் தங்க. கதிரவன் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து திமுக ஒன்றிய செயலாளர் எடிசன்
 

வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சொந்தமான நிலத்தை அபகரித்த புகாரில் தேடப்பட்டு வந்த நாகை கீழையூர் திமுக நிர்வாகி தாமஸ் ஆல்வா எடிசனை சென்னையிலுள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

வேளாங்கண்ணியில் உள்ள இரஜதகிரீஸ்வரர் கோவில், அரசு புறம்போக்கு நிலங்களை முறைகேடாக பட்டா மாறுதல் செய்து கையகப்படுத்திக் கொண்டதாக புகார் எழுந்தது. இவர் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சொந்தமான நிலத்தையும் அபகரித்ததாக அதிமுக நகர செயலாளர் தங்க. கதிரவன் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து திமுக ஒன்றிய செயலாளர் எடிசன் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை வலைவீசி தேடி வந்தனர். அவர் சென்னையில் இருப்பதாக வந்த தகவலையடுத்து அவரை சென்னையிலுள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

திமுக நிர்வாகி தாமஸ் ஆல்வா எடிசனின் கைதுக்கு எதிராக திமுகவினர் போராட்டதில் ஈடுபடக் கூடும் என்பதால் நாகை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.