×

தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைத்திட துணை நிற்போம்- கனிமொழி

 

தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைத்திட துணை நிற்போம் என திமுக எம்பி கனிமொழிம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உடலை கூறு கூறாக வெட்டிப் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியின் சடலத்தை மீட்ட குளத்தூர் போலீசார், சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸார் சிறுமியின் உடலை கூராய்வுக்கு அனுப்ப முயன்றபோது பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி போலீசுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.