×

“தமிழகத்தில் லேடி ஆட்சி இருந்தவரை மோடி பாட்சா பலிக்கவில்லை” : ஆ. ராசா

ஜெயலலிதா ஒரு ஊழல்வாதி, அதனால்தான் அவரது நினைவிட திறப்பு விழாவுக்கு மோடி வரவில்லை என்று ஆ. ராசா விமர்சித்துள்ளார். சென்னை கிழக்கு மாவட்ட எழும்பூர் மற்றும் துறைமுகம் சட்டமன்ற தொகுதிகளில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது பேசிய அவர் , அண்ணா ,எம்ஜிஆர் ஆட்சியை அளிப்போம் என்று கூறாமல் ஜெயலலிதா ஆட்சியை அளிப்போம் என்று முதல்வர் பழனிசாமி கூறி வருகிறார். ஜெயலலிதா நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி. மறுபுறம் தமிழகத்தில் லேடி
 

ஜெயலலிதா ஒரு ஊழல்வாதி, அதனால்தான் அவரது நினைவிட திறப்பு விழாவுக்கு மோடி வரவில்லை என்று ஆ. ராசா விமர்சித்துள்ளார்.

சென்னை கிழக்கு மாவட்ட எழும்பூர் மற்றும் துறைமுகம் சட்டமன்ற தொகுதிகளில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது பேசிய அவர் , அண்ணா ,எம்ஜிஆர் ஆட்சியை அளிப்போம் என்று கூறாமல் ஜெயலலிதா ஆட்சியை அளிப்போம் என்று முதல்வர் பழனிசாமி கூறி வருகிறார்.

ஜெயலலிதா நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி. மறுபுறம் தமிழகத்தில் லேடி ஆட்சி இருந்தவரை மோடி பாட்சா பலிக்கவில்லை. ஜெயலலிதா தமிழகத்தின் , தமிழர்களின் உரிமையை விட்டுக் கொடுத்தது இல்லை . அவர் ஆளுமை மிக்கவர் .எனவே இந்த இரண்டு அடையாளங்களில் எந்த ஆட்சியை அதிமுக அரசு அளிக்க போகிறது” என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், ” தற்போது உள்ள முதல்வரும் , அமைச்சர்களும் மாநில அரசின் உரிமைகளை காப்பாற்ற முடியாமல் மத்திய அரசின் கைப்பாவையாக மாறி உள்ளனர். ஸ்டாலின் முதல்வராக அமர்ந்தால் கல்வி, வேலைவாய்ப்பு என தமிழகம் அனைத்து துறைகளிலும் முதல் இடம் வகுக்கும். ஒரு எடப்பாடி அல்ல 7 எடப்பாடி வந்து தமிழகத்திற்கு மோடியை அழைத்து வந்தாலும் தமிழகத்தில் தாமரை மலராது. ஜெயலலிதா ஒரு ஊழல்வாதி. அதனால்தான் அவரது நினைவிட திறப்பு விழாவுக்கு மோடி வரவில்லை. வார்டு கவுன்சிலராக கூட இருக்க தகுதி இல்லாத ஒருவர் முதல்வராக உள்ளார் ” என்றார் .