×

124-ஆவது ஊட்டி மலர்கண்காட்சியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்!

ஆண்டுதோறும் கோடைவிழாவின் முக்கிய விழாவான ஊட்டி மலர்கண்காட்சி வெகு விமர்சையாக நடைபெறும். ஆயிரக் கணக்கான மக்கள், கோடை வெயியில் இருந்து தப்பிக்க ஊட்டிக்கு வந்து விடுவார்கள். அதே போல இந்த ஆண்டும் மலர்கண்காட்சியை நடத்த கடந்த டிசம்பர் மாதம் முதல் மலர்கள் நடவுப்பணிகள் நடைபெற்று வந்தது. மே 15 ஆம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடக்கவிருந்தது. ஆனால் ஊரடங்கு அமலில் இருப்பதால், 124 ஆவது மலர்கண்காட்சி ரத்து செய்யப்பட்டது. கிட்டத்தட்ட நூற்றுக் கணக்கான வகையில் 5
 

ஆண்டுதோறும் கோடைவிழாவின் முக்கிய விழாவான ஊட்டி மலர்கண்காட்சி வெகு விமர்சையாக நடைபெறும்.  ஆயிரக் கணக்கான மக்கள், கோடை வெயியில் இருந்து தப்பிக்க ஊட்டிக்கு வந்து விடுவார்கள். அதே போல இந்த ஆண்டும் மலர்கண்காட்சியை நடத்த கடந்த டிசம்பர் மாதம் முதல் மலர்கள் நடவுப்பணிகள் நடைபெற்று வந்தது. மே 15 ஆம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடக்கவிருந்தது. ஆனால் ஊரடங்கு அமலில் இருப்பதால், 124 ஆவது மலர்கண்காட்சி ரத்து செய்யப்பட்டது. கிட்டத்தட்ட நூற்றுக் கணக்கான வகையில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மலர்கள் தற்போது ஊட்டியில் பூத்துக் குலுங்குகின்றன.

ஊழியர்களின் ஊழைப்பால் பூத்துக் குலுங்கும் அந்த மலர் கண்காண்சி பூங்கா  மூடப்பட்டுள்ளதால் யாரும் பார்க்க முடியவில்லை. ஆனால் ஊழியர்களின் உழைப்பை வீணாக்க விரும்பாத நிர்வாகம், வீடியோ காணொளி மூலமாகவும் போட்டோ ஆல்பம் தயாராக்கி வருவதாகவும், சில நாட்களில் இந்த வீடியோ அரசு அனுமதியுடன் வெளியாகும்  என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா 124 ஆவது மலர் கண்காட்சியை இன்று பார்வையிட்டார். அப்போது, மக்கள் பார்வையிட இயலாத இந்த மலர் கண்காட்சியை கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள், இராணுவத்தினர் உள்ளிட்டோர் மனமாற்றத்திற்காக பார்வையிடலாம் என்று உத்தரவிட்டுள்ளார்.