×

திருப்பதி கோயிலுக்கு 1.20 கோடி மதிப்பிலான பிளேடுகள் வழங்கிய பக்தர்..! 

 

ஹைத​ரா​பாத்தை சேர்ந்த வெர்ட்​டிகல் குளோபல் எனும் நிறு​வனத்​தின் இயக்​குந​ரான பி.ஸ்ரீதர் நேற்று திரு​மலை​யில் தனது குடும்​பத்​தா​ருடன் இணைந்து அறங்​காவலர் குழு தலை​வர் பி.ஆர்​.​நா​யுடுவை சந்​தித்​தார். அப்​போது ரூ.1.20 கோடி மதிப்​புள்ள பிளேடு​களை அவரிடம் ஒப்​படைத்​தார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் பி.ஸ்ரீதர் கூறுகையில், “திருப்​பதி ஏழு​மலை​யானுக்கு தின​மும் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் தலை​முடி காணிக்கை செலுத்​துகின்​றனர். இதில் ஒரு​வருக்கு பாதி பிளேடு வீதம் பயன்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. இதற்கு திருப்​பதி தேவஸ்​தானம் ஆண்​டுக்கு ரூ.1.16 கோடி நிதி ஒதுக்​கீடு செய்​கிறது.

இதனால் எனது நிறு​வனத்​தில் தயாரிக்​கப்​பட்ட பாதி பிளேடு​களை திருப்​பதி தேவஸ்​தானத்​திற்கு நன்​கொடை​யாக வழங்கி உள்​ளேன். உலகிலேயே எனது நிறு​வனம் தான் முதன்​முதலில் பாதி பிளேடு​களை தயாரித்து விற்​பனை செய்​கிறது.

பாதி பிளேடு​கள் விற்பனை அமெரிக்​கா, ஐரோப்பா உட்பட 52 நாடு​களில் புகழ்​பெற்று விளங்​கு​கிறது. இவ்​வாறு அவர் கூறி​னார்​.

திருப்பதியில் தினசரி மொட்டை அடிப்பவர்களின் எண்ணிக்கை மாறுபடும், மொட்டை அடிக்கும் பணியில் 1,158  ஆனால் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் இது 20,000 முதல் 40,000 வரை இருக்கலாம், புரட்டாசி போன்ற மாதங்களில் 50,000-க்கும் மேல் செல்கிறது. சமீபத்திய தகவலின்படி, ஒரே நாளில் 49,088 பேர் மொட்டை அடித்ததே அதிகபட்சம் என்றும், சராசரியாக ஒரு நாளைக்கு 1 டன் தலைமுடி காணிக்கையாக வருகிறது என்றும் கூறப்படுகிறது.