×

துணை முதல்வர் ஓபிஎஸ் குடியரசு தின வாழ்த்து!

நாட்டின் 72வது குடியரசு தினத்தையொட்டி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 72 வது குடியரசு தினவிழா இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரை சாலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசிய கொடியை ஏற்றினார். சென்னையில் குடியரசு தின நிகழ்ச்சிகளை பார்க்க மாணவர்கள், பொதுமக்களுக்கு அனுமதியில்லை. கொரோனா அச்சுறுத்தலால் வீடுகளுக்கே சென்று சுதந்திர போராட்ட வீரர்களும் கவுரவிக்கப்படுகின்றனர். இந்நிலையில் 72 வது குடியரசு தினவிழாவையொட்டி துணை முதல்வர்
 

நாட்டின் 72வது குடியரசு தினத்தையொட்டி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 72 வது குடியரசு தினவிழா இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரை சாலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசிய கொடியை ஏற்றினார். சென்னையில் குடியரசு தின நிகழ்ச்சிகளை பார்க்க மாணவர்கள், பொதுமக்களுக்கு அனுமதியில்லை. கொரோனா அச்சுறுத்தலால் வீடுகளுக்கே சென்று சுதந்திர போராட்ட வீரர்களும் கவுரவிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் 72 வது குடியரசு தினவிழாவையொட்டி துணை முதல்வர் ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய அரசமைப்பு சட்டம் அமலாகி ஜனநாயகம் மலர்ந்த திருநாளான குடியரசு தினத்தில் அனைவருக்கும் எனது குடியரசு தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.இத்திருநாளில், அரசமைப்பு சாசனம் போதிக்கும் இறையாண்மை, மதசார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம் பேண உறுதுணையாக இருக்க உறுதியேற்போம்” என்று பதிவிட்டுள்ளார்.