×

சுமார் 7 ஆயிரம் பேர் டெங்குவால் பாதிப்பு - அமைச்சர் தகவல் 

 

தமிழ்நாடு முழுவதும் இன்று 100 சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. அதனை ஒட்டி ஆயிரம் விளக்கு தொகுதி ராயப்பேட்டையில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டு  அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  இந்திய வரலாற்றிலேயே வடகிழக்கு பருவமழைக்காக 20,000 மேற்பட்ட மருத்துவ முகாம்களை நடத்தி தமிழ்நாடு அரசு சாதனை படைத்துள்ளது.  மருத்துவ முகாம்களால் ஒவ்வொரு வாரமும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைகிறார்கள்.  மழை நீரை கண்டால் மக்கள் அஞ்சும்  நிலை மாறி,  இன்று மகிழ்ச்சி அடைகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் மழை நீர் வடிகால்.