டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகிறார் விஜய்..!
சென்னையில் இருந்து விமானம் மூலம் அவர் டெல்லி செல்கிறார். கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27-ஆம் தேதி த.வெ.க. தலைவா் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. வழக்கின் விசாரணைக்காக, கடந்த டிசம்பா் இறுதியில் த.வெ.க. பொதுச் செயலா் என்.ஆனந்த், தோ்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா, இணைப் பொதுச்செயலா் சி.டி.ஆா். நிா்மல்குமாா், கரூா் மாவட்டச் செயலா் மதியழகன் ஆகியோா் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஏற்கெனவே நேரில் ஆஜராகினா்.
இதைத் தொடா்ந்து, கடந்த ஜன.12-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு த.வெ.க. தலைவா் விஜய்க்கு சி.பி.ஐ. தரப்பில் அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. சி.பி.ஐ. சம்மனைத் தொடா்ந்து விசாரணைக்காக விஜய் திங்கள்கிழமை காலை தனி விமானம் மூலம் டெல்லி சென்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 6 மணி நேரங்களுக்கும் மேல் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. விஜய் பதில்களை எழுத்துப் பூர்வமாகவும், விடியோவாகவும் அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர்.
பிறகு பொங்கல் பண்டிகை காரணமாக, விஜய்யின் கோரிக்கையை ஏற்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை ஒத்திவைத்தனர். இதனைத்தொடர்ந்து, விசாரணைக்கு மீண்டும் இன்று ஆஜராக விஜய்க்கு அறிவுறுத்தப்பட்டது. இதற்காக விஜய், நேற்று தனி விமானம் மூலம், சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். தொடர்ந்து, சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று காலை விசாரணைக்காக விஜய் ஆஜராகிறார். இதனிடையே விஜய்யின் வருகையையொட்டி, டெல்லியில் காவல் துறை சார்பில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.