×

அவதூறு வழக்கு- ஈபிஎஸ், ஓபிஎஸ் நேரில் ஆஜராக விலக்கு

அவதூறு வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்க்கு விலக்களித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிமுகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த பெங்களூரு புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கி ஜூன் 14ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்ச்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டனர். அதில் கட்சியின் கோட்பாடுகளுக்கும், கட்சி விரோத செயல்பாடுகளுக்கும் காரணமாக இருந்ததால் நீக்கம் என கூறப்பட்டிருந்தது. இது தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரை அவதூறு சட்டத்தின்
 

அவதூறு வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்க்கு விலக்களித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிமுகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த பெங்களூரு புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கி ஜூன் 14ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்ச்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டனர். அதில் கட்சியின் கோட்பாடுகளுக்கும், கட்சி விரோத செயல்பாடுகளுக்கும் காரணமாக இருந்ததால் நீக்கம் என கூறப்பட்டிருந்தது. இது தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க கோரி புகழேந்தி எம்.பி. எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

இதனிடையே கட்சியில் இருந்து நீக்கி ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் வெளியிட்ட அறிக்கை தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக பெங்களூரு புகழேந்தி சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கு நாளை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அவர்கள் இருவரையும் நேரில் ஆஜராக விலக்களித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.