×

“தலித் சிறுவனை கொடூரமாக தாக்கி சிறுநீர் கழித்து அட்டூழியம்”- மதுரையில் அரங்கேறிய கொடுமை

 

மதுரையில் தலித் சிறுவனுக்கு நடந்தேறிய சாதிய தீண்டாமை அவலத்தை வன்மையாக கண்டிப்பதாக நீலம் பண்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக நீலம் பண்பாட்டு மையம் தனது எக்ஸ் தள பக்கத்தில், “மதுரைமாவட்டம் உசிலம்பட்டி சங்கம்பட்டி கிராமத்தில்,கடந்த 16-ஆம் தேதி தலித் சிறுவனை அப்பகுதியை சேர்ந்த கிஷோர், உக்கிரபாண்டி, பிரம்மா, சந்தோஷ், நிதிஷ், மணிமுத்து ஆகியோர்கள் சேர்ந்து மது வாங்கச் சொல்லி காட்டயம் படுத்திருந்த நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்த ஒரே காரணத்திற்காக தலித் சிறுவனை கொடூரமாக தாக்கியும், சாதிரீதியாக கொச்சையாக பேசியும் சிறுநீர் கழித்தும் உள்ளது பேரவலத்தின் உச்சம்.