×

தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமல்!

தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி உணவகங்கள், தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம். பார்சல் சேவை இரவு 10 மணி வரை இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சினிமா படப்பிடிப்பின் போது 100 நபர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றதுடன் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சென்னை விமான
 

தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி உணவகங்கள், தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம். பார்சல் சேவை இரவு 10 மணி வரை இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா படப்பிடிப்பின் போது 100 நபர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றதுடன் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் வெளிமாநிலங்களில் இருந்து 100 விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு மற்றும் அரசு சார்ந்த பயிற்சி நிறுவனங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

10 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் சுய விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்கு சென்று சந்தேகங்களை கேட்டு அறிய அனுமதிக்கும் அரசாணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.