×

தமிழகத்தை பதைபதைக்க வைத்த மருத்துவர் கொலை… 9 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு – மரண தண்டனை வழங்கப்படுமா?

2013ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வைத்து பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் வெட்டப்பட்டார். தலை, கழுத்து, கை, என்று 20க்கும் மேற்பட்ட வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் பொன்னுசாமி, மேரி புஷ்பம், பாசில், போரிஸ், வில்லியம், ஏசுராஜன், ஜேம்ஸ் சதீஷ்குமார், முருகன், செல்வப்பிரகாஷ், ஐயப்பன் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றஞ்சாட்டபட்ட 10 பேர்களில் 2 பேர் வழக்கறிஞர்கள், 2
 

2013ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வைத்து பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் வெட்டப்பட்டார். தலை, கழுத்து, கை, என்று 20க்கும் மேற்பட்ட வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் பொன்னுசாமி, மேரி புஷ்பம், பாசில், போரிஸ், வில்லியம், ஏசுராஜன், ஜேம்ஸ் சதீஷ்குமார், முருகன், செல்வப்பிரகாஷ், ஐயப்பன் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

குற்றஞ்சாட்டபட்ட 10 பேர்களில் 2 பேர் வழக்கறிஞர்கள், 2 பேர் ஆசிரியர்கள், ஒருவர் அரசு மருத்துவர், ஒருவர் இன்ஜனியர், மற்றவர்கள் டிகிரி மற்றும் டிப்ளமோ படித்தவர்கள். வழக்கு நடைபெற்ற காலத்தில் ஐயப்பன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். கடந்த 6 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி கொரோனா காலத்திலும் நேரடி விசாரணையாக தினந்தோறும் நடைபெற்றது.

அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.விஜயராஜ் ஆஜரானார். குற்றம் சாட்டபட்டவர்கள் தரப்பில் ஆதரவாக மூத்த வழக்கறிஞர்கள் கோபாலகிருஷ்ண லக்ஸ்மனராஜு, ரகுநாதன், சந்திரசேகர் உள்ளிட்டோர் ஆஜரானார்கள். இருதரப்பு வாத, பிரதிவாதங்கள் முடிந்து வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்று இவ்வழக்கில் தீர்ப்பளித்த முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்துள்ளார். தண்டனை விவரம் பற்றி இன்னும் சில மணி நேரங்களில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மரண தண்டனை வழங்க அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.