×

“நெற்றிப்பொட்டை துளைத்த தோட்டாக்கள்”- ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை குறித்த பரபரப்பு தகவல்!

சென்னை அருகே 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த தலில்சந்த் என்பவர் சென்னை சவுகார்பேட்டையில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது மகன் ஷீத்தல், மகள் பிங்கி, மனைவி புஷ்பா. நேற்று முன்தினம் தலில்சந்த், ஷீத்தல் மற்றும் புஷ்பா ஆகியோர் குண்டு பாய்ந்த நிலையில் வீட்டில் சடலமாக கிடந்தனர். தகவல் அறிந்து சென்ற போலீசார், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பான
 

சென்னை அருகே 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தானை சேர்ந்த தலில்சந்த் என்பவர் சென்னை சவுகார்பேட்டையில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது மகன் ஷீத்தல், மகள் பிங்கி, மனைவி புஷ்பா. நேற்று முன்தினம் தலில்சந்த், ஷீத்தல் மற்றும் புஷ்பா ஆகியோர் குண்டு பாய்ந்த நிலையில் வீட்டில் சடலமாக கிடந்தனர். தகவல் அறிந்து சென்ற போலீசார், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில் ஷீத்தல் தனது மனைவி ஜெபமாலாவை விட்டு பிரிந்து வாழ்வதாகவும், ஜெபமாலா தான் அவர்கள் 3 பேரையும் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி ஓடினார் என்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.

இந்த நிலையில், உயிரிழந்த 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் உடல்களில் இருந்து எடுக்கப்பட்ட குண்டு நாட்டுத் துப்பாக்கி ரகத்தை சேர்ந்தது என போலீசார் தெரிவித்துள்ளனர். நாட்டுத்துப்பாக்கியை பயன்படுத்தி ஜெபமாலா ஷீத்தல் மற்றும் புஷ்பாவை நெற்றி பொட்டில் சுட்டிருக்கிறார் என்றும் கூறியுள்ளனர்.