×

காஞ்சி அத்திவரதருக்கு பட்டாடை வாங்கியதில் ஊழலா? ஆர்.டி.ஐ. சொல்வது என்ன?

காஞ்சிபுரத்தின் பல்வேறு சிறப்புகளில் ஒன்று வரதராஜ பெருமாள் கோவில். இந்த கோயிலின் கருவறையில் வழிபடப்படும் தேவ ராஜ பெருமாள் ஆதி மூலவர் கிடையாது. இந்த கோயிலின் ஆதி மூலவராக இருந்த அத்தி வரதர் கோயில் தீர்த்தம் குளத்தின் நடுவில் உள்ள மண்டபத்தில் வெள்ளிப் பேழையில் சயன கோலத்தில் இருக்கிறார். நீரில் மூழ்கியிருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே வரும் அத்தி வரதர்
 

காஞ்சிபுரத்தின் பல்வேறு சிறப்புகளில் ஒன்று வரதராஜ பெருமாள் கோவில். இந்த கோயிலின் கருவறையில் வழிபடப்படும் தேவ ராஜ பெருமாள் ஆதி மூலவர் கிடையாது. இந்த கோயிலின் ஆதி மூலவராக இருந்த அத்தி வரதர் கோயில் தீர்த்தம் குளத்தின் நடுவில் உள்ள மண்டபத்தில் வெள்ளிப் பேழையில் சயன கோலத்தில் இருக்கிறார். நீரில் மூழ்கியிருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்.

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே வரும் அத்தி வரதர் 48 நாட்கள் தொடர்ந்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார். முதல் இருபத்தி நான்கு நாட்கள் சயன கோலத்திலும் பின்னர் அடுத்த இருபத்தி நான்கு நாட்கள் நின்ற கோலத்திலும் காட்சி தருவார்.

கடந்த 1979ஆம் ஆண்டு ஜூலை 2ம் தேதி தரிசனம் அளித்த அத்திவரதர் கடந்த 2019 ஆம் ஆண்டில் ஜூலை 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி வரையிலும் தரிசனம் தந்தார். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் தருவதால் உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் காஞ்சிபுரத்திற்கு வந்து குவிந்தனர். கிட்டத்தட்ட 48 நாட்களில் ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்ததாக தகவல்.

தினந்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து சென்றார்கள். இதை அடுத்து அத்தி வரதர் வைபவத்தின்போது அத்தி வரதருக்கு தினமும் பல்வேறு வண்ணங்களில் விலை உயர்ந்த பட்டு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டன. இந்தப் விலை உயர்ந்த பட்டு வஸ்திரங்கள் உடுத்த எவ்வளவு தொகையை செலவிடப்பட்டது என்று காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டில்லிபாபு என்பவர் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆர்.டி.ஐ. யில் தகவல் கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள வரதராஜ பெருமாள் கோவில் நிர்வாகத்தின் செயல் அலுவலர் தியாகராஜன், நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சென்றதால் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளையும் அத்தி வரதர் தரிசனத்திற்கு பின்னர் கோவிலில் இருந்து பாதுகாப்பாக பொதுமக்களை கோவிலுக்கு வெளியே அனுப்பும் பணியிலும் அரசு அலுவலர்கள் அனைவரும் செயல்பட்டதால், திருக்கோவிலில் அன்றாட பணிகள் தள்ளிப் போடப் பட்டிருந்தது. இதனால் அத்திவரதருக்கு பல வண்ணங்களில் வாங்கப்பட்ட விலை உயர்ந்த பட்டு வஸ்திரங்களை கணக்கிடும் பணி தள்ளிப் போடப்பட்டிருக்கிறது என்று பதிலளித்திருக்கிறார்.

இந்த பதிலை வைத்து, விலையுயர்ந்த பட்டு வஸ்திரங்கள் கணக்கீடு செய்யாமல் விலையுயர்ந்த பொருள்கள் மீது ஊழல் நடைபெற்றிருப்பதாக சொல்கிறார் டெல்லி பாபு.