×

திருவாரூரில் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரேநாளில் 3,645 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74,622 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் நேற்று மட்டும் 46பேர் உயிரிழந்தனர். 15பேர் தனியார் மருத்துவமனையிலும், 31 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 957ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் திருவாரூரில் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஏற்கனவே இங்கு 340 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரேநாளில் 3,645 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74,622 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் நேற்று மட்டும் 46பேர் உயிரிழந்தனர். 15பேர் தனியார் மருத்துவமனையிலும், 31 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 957ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் திருவாரூரில் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஏற்கனவே இங்கு 340 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே முழு ஊரடங்கு வரும் 30 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 29 ஆம் தேதி மருத்துவ நிபுணர் குழுவுடன் மீண்டும் ஆலோசனை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.