×

திருச்சியில் கொரோனா பாதிப்பால் முதல் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் சென்னையில் மட்டுமே 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது சென்னையில் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் இடங்களிலும் உயிரிழப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே நாளொன்றுக்கு 500 முதல் 700 வரை உயர்ந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த 2 நாட்களாக 1000ஐ எட்டியுள்ளது. இந்நிலையில், திருச்சியில் கொரோனா பாதிப்பால்
 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் சென்னையில் மட்டுமே 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது சென்னையில் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் இடங்களிலும் உயிரிழப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே நாளொன்றுக்கு 500 முதல் 700 வரை உயர்ந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த 2 நாட்களாக 1000ஐ எட்டியுள்ளது. இந்நிலையில், திருச்சியில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருச்சியில் இதுவே முதல் உயிரிழப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 27 ஆம் தேதி திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்த 70 வயது பெண் ஒருவர், கொரோனா பாதிப்பால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே நீரிழிவு பிரச்சனை இருந்து வந்ததால், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்துள்ளார்.