×

கமல்ஹாசன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியிலிருந்த உதவி ஆய்வாளருக்கு கொரோனா!

சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், வரும் சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கமல்ஹாசன் தொடங்கினார். மதுரை, தேனி, திண்டுக்கல்லில் பிரசாரத்தை முடித்த அவர், திருமங்கலம் வழியாக சாலை மார்க்கத்தில் விருதுநகர் சென்றார். அங்கு அவரது பிரச்சாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால், கமல்ஹாசன், திறந்த வாகனத்தில் ரசிகர்கள், மக்களுக்கு கையசைத்தப்படி சென்றார். வழிநெடுகிலும் திரண்டிருந்த ரசிகர்களும், தொண்டர்களும் கமல்ஹாசன் மீது மலர்தூவி வரவேற்பு அளித்தனர். விருதுநகர் மாவட்டத்தில்
 

சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், வரும் சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கமல்ஹாசன் தொடங்கினார். மதுரை, தேனி, திண்டுக்கல்லில் பிரசாரத்தை முடித்த அவர், திருமங்கலம் வழியாக சாலை மார்க்கத்தில் விருதுநகர் சென்றார். அங்கு அவரது பிரச்சாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால், கமல்ஹாசன், திறந்த வாகனத்தில் ரசிகர்கள், மக்களுக்கு கையசைத்தப்படி சென்றார். வழிநெடுகிலும் திரண்டிருந்த ரசிகர்களும், தொண்டர்களும் கமல்ஹாசன் மீது மலர்தூவி வரவேற்பு அளித்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் முதலாவதாக விருதுநகர் அம்மன் கோயில் திடல் பகுதிக்கு சென்றார். அங்கு பிரச்சாரத்திற்கு அனுமதி இல்லாததால் அங்கு கூடியிருந்த மக்களை பார்த்து கை அசைத்துவிட்டு மட்டும் சென்றார். இதனையடுத்து ஓர் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.