×

‘இளவரசிக்கும் இன்று கொரோனா பரிசோதனை’ – சிறை கண்காணிப்பாளர் தகவல்!

பெங்களூரு சிறையில் உள்ள இளவரசிக்கும் இன்று கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா வரும் 27 ஆம் தேதி விடுதலையாகவுள்ள நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு அதிதீவிர நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளது. அத்துடன் அவருக்கு கொரோனா இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. நுரையீரலில் சளி அதிகமாக இருக்கும் நிலவில் ஆக்சிஜன் அளவு 95 என்ற நிலையில் உள்ளது. அத்துடன் சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு
 

பெங்களூரு சிறையில் உள்ள இளவரசிக்கும் இன்று கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.

சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா வரும் 27 ஆம் தேதி விடுதலையாகவுள்ள நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு அதிதீவிர நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளது. அத்துடன் அவருக்கு கொரோனா இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. நுரையீரலில் சளி அதிகமாக இருக்கும் நிலவில் ஆக்சிஜன் அளவு 95 என்ற நிலையில் உள்ளது. அத்துடன் சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள இளவரசிக்கு இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இளவரசிக்கும் இன்று பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.