×

கொரோனா: அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண அறைக்கு மாற்றப்பட்டார் கே.பி.அன்பழகன்!

கொரோனா பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் அன்பழகன் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த சாதாரண சிகிச்சை பெறும் வகையில் வேறு அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் முதலில் கொரோனா பாதிப்பு இல்லை என்று அன்பழகன் தரப்பிலும் தமிழக அரசு தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டது. திடீரென்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அன்பழகன். அவருடைய உடல்நிலை மோசமடைந்து வருவதாக
 

கொரோனா பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் அன்பழகன் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த சாதாரண சிகிச்சை பெறும் வகையில் வேறு அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் முதலில் கொரோனா பாதிப்பு இல்லை என்று அன்பழகன் தரப்பிலும் தமிழக அரசு தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டது. திடீரென்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அன்பழகன். அவருடைய உடல்நிலை மோசமடைந்து வருவதாக செய்தி வெளியானது.

உடனடியாக அவர் நலமாக உள்ளார், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டார் என்று செய்தி பரப்பப்பட்டது. இந்த நிலையில் அவர் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு (தனி சொகுசு அறை) மாற்றப்பட்டதாக இன்று செய்தி வெளியாகி உள்ளது. இந்த சாதாரண அறையில் அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் என்றும், இன்னும் இரண்டு மூன்று நாட்கள் கழித்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்றும் அமைச்சர் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.அவர் மருத்துவமனையில் உள்ளாரா, இரண்டு நாட்களுக்கு முன்பு டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார் என்று கூறியது உண்மையா, பொய்யா என்று விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் தொகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.