×

பிறந்து 27 நாட்களே ஆன பச்சிளங் குழந்தைக்கு கொரோனா

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பிறந்து 27நாட்களான பச்சிளங் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கோவில்பட்டி அருகேயுள்ள இடைச்செவல் கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த மாதம் 7 ஆம் தேதி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அதன்பின் சில தினங்களில் குழந்தையுடன் வீடு திரும்பியுள்ளார். இதற்கிடையில் குழந்தையின் தாத்தாவிற்கு லேசான காய்ச்சல் அறிகுறி தென்படவே அவர் கொரோனா பரிசோதனை செய்துள்ளார். இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதையெடுத்து
 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பிறந்து 27நாட்களான பச்சிளங் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கோவில்பட்டி அருகேயுள்ள இடைச்செவல் கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த மாதம் 7 ஆம் தேதி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அதன்பின் சில தினங்களில் குழந்தையுடன் வீடு திரும்பியுள்ளார். இதற்கிடையில் குழந்தையின் தாத்தாவிற்கு லேசான காய்ச்சல் அறிகுறி தென்படவே அவர் கொரோனா பரிசோதனை செய்துள்ளார். இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதையெடுத்து வீட்டில் உள்ள அனைவருக்கும் வில்லிசேரி ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாக கடந்த 2 ஆம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பிறந்து 27நாட்களான ஆண் குழந்தைக்கு மட்டும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மற்றவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை. இதையடுத்து அக்குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.