×

சென்னை ஐஐடியில் மேலும் 79 பேருக்கு கொரோனா – பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200ஐ நெருங்குகிறது!

சென்னை ஐஐடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 183 ஆக உயர்ந்துள்ளது. சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் கடந்த 9ம் தேதி 4 மாணவர்களுக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த 444 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 87 மாணவர்களுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் மூலம் நேற்று வரை ஐஐடியில் கொரோனா தொற்று இருப்போரின் எண்ணிக்கை 104 ஆக இருந்தது. இந்நிலையில் சென்னை ஐஐடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா
 

சென்னை ஐஐடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 183 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் கடந்த 9ம் தேதி 4 மாணவர்களுக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த 444 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 87 மாணவர்களுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் மூலம் நேற்று வரை ஐஐடியில் கொரோனா தொற்று இருப்போரின் எண்ணிக்கை 104 ஆக இருந்தது.

இந்நிலையில் சென்னை ஐஐடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றாததால் தான் ஐஐடி கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளது. இன்று மேலும் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மூலமே மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. முதன் முதலமாக சாப்பிடும் இடத்தில் மாணவர்கள் ஒட்டுமொத்தமாக கூடியதால் அதன்மூலமே கொரோனா பரவியதாக கூறப்படுகிறது.

இருப்பினும் ஐஐடியில் கொரோனா பரவல் எதிரொலியாக மாணவர்களின் உடல்நிலையை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறி தென்பட்டாலே கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.