×

பிரிட்டனிலிருந்து காஞ்சிபுரம் வந்த 7 பேருக்கு கொரோனா?

பிரிட்டனிலிருந்து காஞ்சிபுரம் வந்த 7 பேரிடம் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு இருக்கக்கூடும் என்ற கோணத்தில் அவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு விசாரணை நடந்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரிட்டனிலிருந்து நவம்பர் 25 ஆம் தேதி தமிழகம் வந்த அனைத்து பயணிகளையும் கண்காணிக்குமாறு அரசு உத்தரவிட்டதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு வந்தவர்கள் பற்றி விசாரிக்கப்பட்டது. அப்படி வந்தவர்களில் 7 பேர் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்ததைத் தொடர்ந்து அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்.மேலும் அவர்களது ரத்தமாதிரிகளையும்
 

பிரிட்டனிலிருந்து காஞ்சிபுரம் வந்த 7 பேரிடம் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு இருக்கக்கூடும் என்ற கோணத்தில் அவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு விசாரணை நடந்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனிலிருந்து நவம்பர் 25 ஆம் தேதி தமிழகம் வந்த அனைத்து பயணிகளையும் கண்காணிக்குமாறு அரசு உத்தரவிட்டதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு வந்தவர்கள் பற்றி விசாரிக்கப்பட்டது.

அப்படி வந்தவர்களில் 7 பேர் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்ததைத் தொடர்ந்து அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்.மேலும் அவர்களது ரத்தமாதிரிகளையும் எடுத்து பரிசோதனைக்கு அதிகாரிகள் அனுப்பி இருக்கின்றனர்.

பிரிட்டனிலிருந்து வந்தவர்களில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் தாலுகாவைச் சேர்ந்தவர்கள் 4 பேரும், காஞ்சிபுரம் தாலுகாவைச் சேர்ந்தவர்கள் 3 பேரும் உட்பட மொத்தம் 7 பேர் என தெரிய வந்துள்ளது. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் சுகாதாரத்துறையினரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.