×

மருத்துவக் கலந்தாய்வில் கலந்து கொண்ட 4 மாணவர்களுக்கு கொரோனா!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற 4 மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நடப்பாண்டுக்கான மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. முதன்முறையாக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீட்டுடன் கலந்தாய்வு நடைபெற்ற நிலையில், 18 மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கைக்கான ஆணை வழங்கப்பட்டது. முறைகேட்டை தவிர்ப்பதற்காகவே மருத்துவ கலந்தாய்வு நேரில் நடத்தப்பட்ட நிலையில், உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டது. மாணவர்களும் பெற்றோர்களும் உள்ளே செல்வதற்கு முன்னர் உடல்வெப்பநிலை
 

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற 4 மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

நடப்பாண்டுக்கான மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. முதன்முறையாக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீட்டுடன் கலந்தாய்வு நடைபெற்ற நிலையில், 18 மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கைக்கான ஆணை வழங்கப்பட்டது. முறைகேட்டை தவிர்ப்பதற்காகவே மருத்துவ கலந்தாய்வு நேரில் நடத்தப்பட்ட நிலையில், உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டது.

மாணவர்களும் பெற்றோர்களும் உள்ளே செல்வதற்கு முன்னர் உடல்வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. அதே போல மாணவர்களுக்கும் சான்றிதழ் சரிபார்க்கும் அலுவலருக்கும் இடையே கண்ணாடி தடுப்பு அமைக்கப்பட்டடு கலந்தாய்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில், கலந்தாய்வில் கலந்து கொண்ட 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக 262 மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்ட நிலையில், 4 பேருக்கு கொரோனா உறுதியானதால் கலந்தாய்வில் பங்கேற்ற அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.