மூன்று பெண் காவலர் உள்பட 4 பேருக்கு கொரோனா! – அச்சத்தில் மொராப்பூர் போலீசார்
தருமபுரி மாவட்டம் மொராப்பூர் காவல் நிலையத்தில் மூன்று பெண் காவலர் உள்பட நான்கு பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் மற்ற போலீசார் அச்சத்தில் உள்ளனர்.
இதைத் தொடர்ந்து காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் இதுவரை மாவட்ட மக்கள் யாருக்கும் கொரோனத் தொற்று ஏற்படவில்லை என்று கூறப்பட்டது. வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து வந்தவர்களுக்கே கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டது என்று கூறப்பட்டது. தற்போது காவல் நிலையத்தில் பணி புரியும் நான்கு காவலர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது சந்தேகத்தையும் பயத்தையும் அதிகரித்துள்ளது