×

ரகசியமாக மகாராஷ்டிரா பயணம் : 21 பேருக்கு கொரோனாவை பரப்பியவர் மீது வழக்குப்பதிவு!

சேலத்தில் ஒரே தெருவில் 21 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட காரணமாக இருந்தவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,14,978 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,542 ஆக அதிகரித்துள்ளது. அந்த வகையில் சேலத்திலும் கொரோனா வீரியம் வேகம் எடுத்து வரும் நிலையில் சேலத்தில் 54 ஆவது வார்டில் வசித்து வரும் மகாராஷ்டிராவை சேர்ந்த ஒருவர் அண்மையில் மகாராஷ்டிராவிற்கு சென்று வந்துள்ளார். ஆனால் இதுகுறித்து நகராட்சி ஊழியர்களுக்கு தகவல் தராமல்
 

சேலத்தில் ஒரே தெருவில் 21 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட காரணமாக இருந்தவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,14,978 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,542 ஆக அதிகரித்துள்ளது. அந்த வகையில் சேலத்திலும் கொரோனா வீரியம் வேகம் எடுத்து வரும் நிலையில் சேலத்தில் 54 ஆவது வார்டில் வசித்து வரும் மகாராஷ்டிராவை சேர்ந்த ஒருவர் அண்மையில் மகாராஷ்டிராவிற்கு சென்று வந்துள்ளார்.

ஆனால் இதுகுறித்து நகராட்சி ஊழியர்களுக்கு தகவல் தராமல் நோய் தொற்றுடன் ரகசியமாக இருந்ததாக தெரிகிறது. அதுமட்டுமின்றி தொற்றுடன் இவர் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தில் 4 பேர் உள்பட அப்பகுதியில் 21 பேருக்கு கொரோனா தொற்றை பரப்பியுள்ளார்.

நகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக பரிசோதனை மேற்கொண்ட போது இதுகுறித்த உண்மை தெரியவந்துள்ளது. இதன் காரணமாக கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.