×

தமிழகத்தில் கொரோனா இறப்பு 10 ஆயிரத்தை கடந்தது!

கொரோனா தொற்றுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 10 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்திய அளவில் கொரோனா இறப்பு விகிதத்தில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா மரணம் 10 050 ஆக உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இறப்பு விகிதம் 39 ஆயிரத்து 430 ஆக உள்ளது. இந்திய அளவில் நேற்று மட்டும் இறப்பு எண்ணிக்கை 975 ஆக உள்ளது. ஒட்டுமொத்தமாக இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 455 ஆக
 

கொரோனா தொற்றுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்திய அளவில் கொரோனா இறப்பு விகிதத்தில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா மரணம் 10 050 ஆக உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இறப்பு விகிதம் 39 ஆயிரத்து 430 ஆக உள்ளது.

இந்திய அளவில் நேற்று மட்டும் இறப்பு எண்ணிக்கை 975 ஆக உள்ளது. ஒட்டுமொத்தமாக இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 455 ஆக உள்ளது. இந்தியாவில் கடந்த 7 நாட்களாக தொற்று விகிதம் தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. தற்போது 70 ஆயிரத்து 225 ஆக குறைந்துள்ளது.

கடந்த 44 நாட்களுடன் ஒப்பிடுகையில் நேற்று தொற்று விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. இந்திய அளவில் இதுவரை, 9 லட்சத்து 89 லட்சம் பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.