×

மதுரையில் மேலும் 210 பேருக்கு கொரோனா : மொத்த எண்ணிக்கை 5, 509 ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,581ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 73,728 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரையில் இன்றுகாலை நிலவரப்படி மேலும் 210 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,509 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,203 ஆக உள்ள நிலையில் 4,001 பேர் சிகிச்சை
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,581ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 73,728 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுரையில் இன்றுகாலை நிலவரப்படி மேலும் 210 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,509 ஆக உயர்ந்துள்ளது.

குணமடைந்தோர் எண்ணிக்கை 1,203 ஆக உள்ள நிலையில் 4,001 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை மதுரை மாவட்டத்தில் 95 பேர் பலியாகியுள்ளனர். சென்னைக்கு அடுத்ததாக மதுரையில் தான் கொரோனா பரவல் அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது.