×

கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு- ஒருவர் பலி

 

குன்றத்தூரில் கள்ளக்காதல் விவகாரத்தால் ஏற்பட்ட தகராறு காரணமாக மத்திய அரசு ஊழியர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குன்றத்தூர், சம்பந்தம் நகரை சேர்ந்தவர் பத்மகுரு(37), இவர் அதே பகுதியில் கோழி கறி கடை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி சிந்து(30), பத்மகுருவிற்கும் குன்றத்தூரை சேர்ந்த மீனா(29), என்ற பெண்ணுக்கும் பழக்கம் இருப்பதாக கூறி பத்மகுருவின் மனைவி சிந்து மீனாவின் வீட்டிற்கு சென்று தகராறு செய்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த மீனா மற்றும் அவரது கணவர் ரஜினி அவரது உறவினர்கள் நேற்று இரவு பத்மகுருவின் வீட்டிற்கு வந்து இது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்புக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பத்மகுரு வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து குத்தியதில் மீனாவின் உறவினர் குமரன்(33), விஷ்வா(19), ஆகியோருக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது. இதில் குமரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக ரத்த வெள்ளத்தில் இறந்து போனார். 

விஷ்வா காயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து போன குமரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்ட குமரன் ஆவடியில் உள்ள மத்திய அரசின் கனரக தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.