×

வசந்த்குமார் எம்.பி. படத்திற்கு காங்கிரசார் மலர் தூவி அஞ்சலி

தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் கன்னியாகுமரி தொகுதியின் எம்பியுமான வசந்த் குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா வால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார் இதையடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் அவரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது . அதன்படி இன்று ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மூலப் பட்டறையில் உள்ள கட்சி அலுவலகத்தில்
 


தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் கன்னியாகுமரி தொகுதியின் எம்பியுமான வசந்த் குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா வால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார் இதையடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் அவரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி

செலுத்தப்பட்டு வருகிறது . அதன்படி இன்று ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மூலப் பட்டறையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வசந்த்குமார் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார் மாநகர் மாவட்ட தலைவர் ஈபி ரவி வசந்த் குமார் எம்பி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார் முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் முன்னாள் துணை மேயர் பிரபு என்கிற வெங்கடாச்சலம் விவசாய பிரிவு பெரியசாமி மண்டல தலைவர்கள் அம்புலி திருச்செல்வம் துணைத்தலைவர் தண்டபாணி

பொதுச் செயலாளர் கனகராஜ் வின்சென்ட் நெசவாளர் அணி மாரிமுத்து எஸ்சி எஸ்டி பிரிவு தலைவர் சின்னசாமிமுஹம்மத் அர்சத் உட்பட பலர் கலந்து கொண்டனர் இதேபோல் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மணல் மேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் வசந்த் குமார் எம்பி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் தலைமையில் வசந்த்குமா ர்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது முன்னாள் எம்எல்ஏ ஆர் . எம். பழனிச்சாமி வட்டார தலைவர்கள் கோபாலகிருஷ்ணன் முத்துக்குமார் தளபதி ரமேஷ் சிவகுமார் ராஜ்குமார் செல்வபாரதி சர்வேஸ்வரன் பையாஸ் அலி அரிப்அலி உட்பட பலர் கலந்து கொண்டனர் .

ரமேஷ் கந்தசாமி