ராகுல்காந்தி, இந்திய கூட்டணி கட்சிகள் எடுத்த உறுதியான முயற்சிக்கு கிடைத்த வெற்றி- செல்வப்பெருந்தகை
வரும் காலங்களில் மக்கள் நலனுக்காக உறுதியாக செயல்பட்டு, ஒரணியில் திரண்டு ஒன்றிய பாஜக அரசு கொண்டு வரும் மக்கள் விரோத மசோதாக்களை எதிர்கொள்வோம் என்ற நம்பிக்கை உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
மக்களவை தொகுதி மறுவரையறையுடன் கூடிய மகளிர் இட ஒதுக்கீடு (33%) மசோதா தோல்வி அடைந்தது. அரசமைப்பு சட்டத்தின் 131இல் திருத்தம் மேற்கொள்ளும் மசோதா நிறைவேற பதிவான 489 வாக்குகளில், 3இல் 2 பங்கான 326 வாக்குகள் தேவை எனும் நிலையில் 278 பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர். இதனால் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா தோல்வியடைந்ததது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 297 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்த போதும் கூட தொகுதி மறு வரையறை மசோதா மீதான வாக்கெடுப்பில் 278 வாக்குகள் என்பது தான் பதிவாகி இருக்கிறது. எனவே பாஜகவின் கூட்டணியில் உள்ள கிட்டத்தட்ட 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள். இதனையடுத்து தொகுதி மறு வரையறை மசோதா நிராகரிக்கப்பட்டதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.