அதானியிடம் விசாரணை நடத்தினால் மோடியுடன் உள்ள இணைப்பு வெளிவரும் - காங்கிரஸ்
Nov 21, 2024, 14:20 IST
அதானியிடம் விசாரணை நடத்தப்பட்டால், நரேந்திர மோடியுடன் உள்ள ஒவ்வொரு இணைப்பும் வெளிவரும் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்காவில் ஒப்பந்தம் பெறுவதற்கு அதானி நிறுவனம் ரூ.2,200 கோடி லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை தொடங்கிய போது, விசாரணையை நிறுத்த சதித் திட்டம் தீட்டப்பட்டது. தற்போது அதானிக்கு எதிராக அமெரிக்காவில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது விசித்திரமானது...