×

இந்து பெண்களை விபச்சாரி எனக்கூறிய திருமாவளவன் மீது பாஜகவினர் புகார்

இந்து பெண்கள் குறித்து அவதூறாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜகவினர் புகார் அளித்துள்ளனர். மனுதர்மமானது இந்து பெண்கள் அனைவரையுமே விபச்சாரிகள் என்றே குறிப்பிட்டிருக்கிறது என பெரியார் யூடியூப் சேனலுக்கு திருமாவளவன் பேட்டியளித்திருந்தார். சர்ச்சை குறித்த கருத்துக்களை பேசிய திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட மகளிரணி துணை தலைவர் புஷ்பராணி தலைமையில் 30க்கும் மேற்பட்ட பாஜகவினர் மாங்காடு போலீஸ் நிலையத்தில்
 

இந்து பெண்கள் குறித்து அவதூறாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.

மனுதர்மமானது இந்து பெண்கள் அனைவரையுமே விபச்சாரிகள் என்றே குறிப்பிட்டிருக்கிறது என பெரியார் யூடியூப் சேனலுக்கு திருமாவளவன் பேட்டியளித்திருந்தார். சர்ச்சை குறித்த கருத்துக்களை பேசிய திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட மகளிரணி துணை தலைவர் புஷ்பராணி தலைமையில் 30க்கும் மேற்பட்ட பாஜகவினர் மாங்காடு போலீஸ் நிலையத்தில் ஒன்று திரண்டு முழக்கங்கள் எழுப்பி புகார் அளித்தனர்.

இந்து பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய அவதூறாக பேசிய திருமாவளவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து புகாரை பெற்றுகொண்ட போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.