அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள்... அதிரடி காட்டிய ராமதாஸ் பொதுக்குழு!
அன்புமணி தரப்பு மீதான நடவடிக்கை குறித்து 8 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு தயாரித்த அறிக்கை பாமக பொதுக்குழுவில் வாசிக்கப்பட்டது.
அதில், புத்தாண்டு நிகழ்வின்போது மைக்கை தூக்கிப் போட்டதுடன், பனையூர் அலுவலகத்துக்கு வரச்சொல்லி தொண்டர்களுக்கு கைப்பேசி எண் கொடுத்தது.
தைலாபுரத்தில் நடந்த மா.செ. கூட்டத்திற்கு, 100 மா.செ.க்களை வராமல் தடுத்தது.
சமூக ஊடகங்களில் ராமதாஸ் பற்றி அவதூறான, அருவருக்கத்தக்க, இழிவுபடுத்தும் செய்திகளை வெளியிட்டது.
சமரச பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்ளாமல் உதாசீனப்படுத்தியது
ராமதாஸ் இருக்கைக்கு கீழ் ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது.
அனுமதி பெறாமல் பொதுக்குழுவில், தனி இருக்கை, துண்டு வைத்து, ‘ராமதாஸுக்கு நல்ல புத்தி கிடைக்க’ வேண்டியது.
அனுமதியை மீறி 'உரிமை மீட்க தலைமுறை காக்க' என்ற நடைபயணம் கபட நாடகம்.
ராமதாஸை சந்திக்க வருவோரிடம், பணமும் பதவியும் தருவதாக ஆசை வார்த்தை கூறி பனையூருக்கு கடத்திச் செல்வது
புகைப்படம், பெயர் விவகாரத்தில் ராமதாஸ் வலியுறுத்திய பின்னரும், கூட்டங்களில் தொடர்ந்து கொச்சைப்படுத்தி பேசிவருவது
பசுமைத்தாயகம் அமைப்பை திட்டமிட்டு கைப்பற்றிக் கொண்டது
ராமதாஸ் அனுமதி பெறாமல் பொதுக்குழு கூட்டி, அவருக்கே தனி இருக்கை வைத்து துண்டு அணிவித்தது
பாமக தலைமை அலுவலகத்தை, ராமதாஸுக்கு தெரியாமலேயே மாற்றியது
ராமதாஸிடம் எதுவுமே பேசாமல், 40 முறை பேசியதாக பொதுவெளியில் சொன்னது
ஜி.கே.மணி, அருள் ஆகியோர் மருத்துவமனையில் இருந்தபோது, கூட்டுப் பிரார்த்தனை செய்வதாக கேலி கிண்டல் செய்தது
ராமதாஸ் நீக்கியவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்தது செல்லாது
மக்கள் தொலைக்காட்சியை அபகரித்தது ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.