×

திருமண நிகழ்ச்சியில் கல்லூரி மாணவன் வெட்டிக் கொலை; அதிர்ச்சி சம்பவம்!

காஞ்சிபுரம் அருகே கல்லூரி மாணவன் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் அபிஷேக். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரி ஒன்றில் 3ம் ஆண்டு படித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று சோமங்கலம் அருகே இருக்கும் தர்காஸில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு அபிஷேக் சென்றிருக்கிறார். அவரை பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள், அவரை வெட்டிக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த
 

காஞ்சிபுரம் அருகே கல்லூரி மாணவன் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் அபிஷேக். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரி ஒன்றில் 3ம் ஆண்டு படித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று சோமங்கலம் அருகே இருக்கும் தர்காஸில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு அபிஷேக் சென்றிருக்கிறார். அவரை பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள், அவரை வெட்டிக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், அபிஷேக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அபிஷேக்கை கொலை செய்த மர்ம நபர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.

முன் விரோதம் காரணமாக அபிஷேக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் அபிஷேக்கின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.