சொந்தக் குடும்பத்தையே பார்க்காதவர் மக்களை எப்படிப் பார்ப்பார்? - தவெக வேட்பாளரை துளைத்தெடுத்த இளம்பெண்கள்
சொந்தக் குடும்பத்தையே பார்க்காதவர், மக்களை எப்படிப் பார்ப்பார் என்று கோவையில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளரை இளம்பெண்கள் கேள்விகளால் துளைத்தெடுக்க பதிலளிக்க முடியாமல் வேட்பாளர் ஓட்டம் பிடித்தார்.
கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் என்.எம் சுகுமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். வாரச்சந்தை என்பதால் கூட்டம் அலைமோதிய நிலையில், வேட்பாளர் பொதுமக்கள் காய்கறி வியாபாரிகளிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி ஆதரவு திரட்டினார். அப்போது அங்கிருந்த ஒரு காய்கறி கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஒரு பெண்மணி மற்றும் இரண்டு இளம்பெண்களிடம் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்றும், தங்களது தலைவர் விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழக மக்கள் மற்றும் பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று கூறினார். அதை ஆமோதித்த காய்கறி கடையில் விற்பனையில் ஈடுபட்டிருந்த ஒரு பெண்மணி மற்றும் இரண்டு இளம் பெண்கள் வேட்பாளர் சுகுமாரிடம் சராமரி கேள்விகளை எழுப்பத் தொடங்கினர்.