×

கோயம்பேடு சந்தை இன்று நள்ளிரவு திறப்பு!

கொரோனா காரணமாக மூடப்பட்ட சென்னை கோயம்பேடு காய்கறி, மலர் சந்தை நள்ளிரவு முதல் திறக்கப்படுகிறது. மே 5ஆம் தேதி மூடப்பட்ட நிலையில் சுமார் ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு கோயம்பேடு சந்தை திறக்கப்படுகிறது. காய்கறி கடை பணியாளர்கள், தொழிலாளர்கள் விவரங்களை உரிமையாளர்கள் பராமரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு உடல் பரிசோதனை செய்யவும் ஒவ்வொரு கடை முன்பு கிருமிநாசினி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மொத்த காய்கறி சந்தையில் சரக்கு வாகனங்கள் இரவு 9 முதல் மாலை 5 மணி வரை
 

கொரோனா காரணமாக மூடப்பட்ட சென்னை கோயம்பேடு காய்கறி, மலர் சந்தை நள்ளிரவு முதல் திறக்கப்படுகிறது.

மே 5ஆம் தேதி மூடப்பட்ட நிலையில் சுமார் ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு கோயம்பேடு சந்தை திறக்கப்படுகிறது. காய்கறி கடை பணியாளர்கள், தொழிலாளர்கள் விவரங்களை உரிமையாளர்கள் பராமரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு உடல் பரிசோதனை செய்யவும் ஒவ்வொரு கடை முன்பு கிருமிநாசினி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மொத்த காய்கறி சந்தையில் சரக்கு வாகனங்கள் இரவு 9 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இதனிடையே சென்னையில் கொரோனா பரவல் குறைந்து இருந் நிலையில் கோயம்பேடு சந்தை மூலமாகவே தொற்று வேகம் எடுக்க தொடங்கியது கவனிக்கத்தக்கது.