×

#BREAKING விஜயை அவதூறாக பேசியதாக ஆ.ராசா மீது புகார் மனு

 

முதல்வர் விஜய் பற்றி அவதூறாக பேசியதாக திமுக துணைப் பொதுச் செயலரும், எம்.பி.யுமான ஆ.ராசா மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

முதல்வர் விஜய் பற்றி அவதூறாக பேசியதாக திமுக துணைப் பொதுச் செயலரும், எம்.பி.யுமான ஆ.ராசா மீது பெரம்பலூர் எஸ்.பி. அலுவலகத்தில், அம்மாபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக உள்ள ராசாமணிகண்டன் புகார் மனு அளித்துள்ளார். ஆ.ராசாவின் பேச்சு சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளதாக கூறி புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் ஜூன் 25இல் நடந்த விழாவில் முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.